திருப்பதியில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் புக்கிங் மிஸ் பண்ணிட்டீங்களா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை மிஸ் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். நாளை காலை 10 மணிக்கு ரெடியா இருங்க!
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் தரிசிக்கிறார்கள்.

ஏழுமலையானை தரிசிக்க 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்த நிலையில் மாதந்தோறும் 24 ஆம் தேதி அன்று ரூ 300 தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.
தேவஸ்தான வெப்சைட்டில் வெளியாகிறது. மாதந்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் கூட ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகள் வெளியாகின.
ஒரு வேளை ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்யும் போது உங்களுக்கு கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். நாளை காலை 10 மணிக்கு திவ்ய அனுகிரக ஹோமம் என்ற டிக்கெட் வெளியாகும்.
இந்த டிக்கெட்டை வைத்து ஏப்ரல் மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இந்த ஹோமத்திற்கான டிக்கெட் 1600 ரூபாய். இதில் தம்பதியாகவும், அல்லது இருவேறு நபர்களும் கலந்து கொள்ளலாம். இந்த 1600 ரூபாயில் 1000 ரூபாய் ஹோமத்திற்கானது மீதி ரூ 600-ல் ரூ 300 தரிசன டிக்கெட் 2 கொடுப்பார்கள்.
இதை வைத்து அன்றைய தினமே மதியம் 3 மணிக்கு நீங்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி (Alipiri) பகுதியில் அமைந்துள்ள 'சப்த கோ பிரதக்ஷிண சாலா' வில் (Saptha Gau Pradakshina Shala) இந்த ஹோமம் நடைபெறும்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள காலை 8.30 மணிக்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த ஹோமம் நடைபெறும்.
ஹோமத்தில் கலந்து கொண்டால் மட்டுமே ரூ 300 தரிசன டிக்கெட் வழங்கப்படும். இந்த ஹோம டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். ஆஃப்லைனில் இல்லை. ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது அங்கவஸ்திரம் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும். ஜீன்ஸ், டீசர்ட்டுக்கு அனுமதி இல்லை.
ஹோமத்தின் நன்மைகள்
வாழ்வில் வரும் தடைகள் நீங்கி, செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.
குடும்ப ஒற்றுமை மற்றும் மன அமைதிக்காக இந்த ஹோமம் நடத்தப்படுகிறது.
பங்கேற்பாளர்களுக்குப் பிரசாதமாக அட்சதை மற்றும் ஹோம ரக்ஷை (காப்பு) வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications