கைக்குழந்தைக்கான சிறப்பு தரிசனத்திற்கு திருப்பதி போறீங்க! தேவஸ்தானத்தின் முக்கிய ரூல்ஸ் இதுதான்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கான நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சங்களை தாண்டும். இந்த கோயில் உண்டியல் வருமானமும் அதிகம்.

வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால் அவற்றின் மதிப்பு முழுவதுமாக தெரியாது. பல பக்தர்கள் தங்கள் கடைசி காலத்தில் தங்கள் சொத்துகளை திருப்பதி கோயிலுக்கு உயிலாக எழுதி வைத்து விடுகிறார்கள்.
இந்த கோயிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு, புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் என்பதாலும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் அக்டோபர் மாதம் 7,8,14,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தான் தெரிவித்துவிட்டது. மேலும் திருப்பதி ஏழுமலையான கோயிலில் வயதானவர்கள், கைக் குழந்தையை வைத்திருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டோருக்கென தனி வரிசையில் எளிதாக சென்று ஏழுமலையானை காணலாம்.
அதில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்காக நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சன்னதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த தரிசனத்திற்காக ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பெற்றோர் மற்றும் குழந்தையின் உடன்பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். உடன் வரும் உறவினர்களுக்கு அனுமதி கிடையாது.
தகுதியுடைய பக்தர்கள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மாதத்தில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த தரிசனத்திற்கு டிக்கெட் அல்லது முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. சிறப்பு விழா, பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications