Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் சனாதன தர்மம் பற்றி பேசும் பவன் கல்யாண்.. ஆனால் திருப்பதியில் .. ரோஜா கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: சனாதன தர்மத்தை காப்பாற்ற வந்த பீடாதிபதி போல தன்னைத்தானே காட்டிக் கொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருமலையில் பசுக்களைகூட காப்பாற்ற முடியாத நிலையில் ஆந்திர அரசாங்கம் இருப்பதை வேடிக்கை பார்க்கிறார். இவர் தான் தமிழ்நாட்டில் போய் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார் என்று நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ரோஜா செல்வமணி விமர்சித்தார்.

நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான ஜெகன்மோகன்ரெட்டி அண்மைக்காலங்களில் சனாதான தர்மம் பற்றி அதிகம் பேசி வருகிறார். திருப்பதி நெய் கலப்பட விவகாரம் தொடங்கி, தமிழ்நாட்டில் முருகன் கோவில்களுக்கு சுற்றுப்பயணம், மதுரை முருகன் மாநாட்டில் பேச்சு என்று சனாதனம் பற்றி முழு வீச்சாக பேசி வருகிறார். அதேநேரம் ஆந்திராவில் முன்பு ஆளும் கட்சியாகவும், இப்போது எதிர்க்கட்சியாகவும் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Roja Selvamani criticizes Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan regarding Tirupati

பவன் கல்யாண் தாக்கு

அண்மையில் ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நாட்டினார்.அப்போது பவன் கல்யாண் பேசுகையில் 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன் அரசு முறையாக பயன்​படுத்​த​வில்​லை.

ஜெகன் கட்சியினர்

மத்​திய அரசுடன் நாங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதை தொடர்ந்து ஜல்​ஜீவன் திட்​டத்​தின் கீழ் முதல்​கட்​ட​மாக ரூ.1,290 கோடி​யில் இத்​திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்டிருக்கிறது. இதன் மூலம் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் பயன் அடை​வார்​கள். இங்​குள்ள லட்​சுமி சென்​னகேசவுலு கோயில் உட்பட பல்​வேறு கோயில்​களின் நிலங்​களை ஜெகன் ஆட்​சி​யில் அவரது கட்​சி​யினர் ஆக்​கிரமிப்பு செய்​துள்​ளனர். இந்த நிலங்​களை மீட்க தனி கமிட்டி அமைக்​கப்​படும். அதன் மூலம் கோயில் நிலங்​கள் அனைத்​தும் மீட்​கப்​படும்" என்று கூறினார்.

ரோஜா பதிலடி

இதனிடையே பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ரோஜா செல்வமணி நேற்று பேசியிருக்கிறார். ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 'ரீ கால் சந்திரபாபுநாயுடு' என்ற பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகையும், முன்னாள் மந்திரியுமான ரோஜா கலந்துகொண்டார்.

சந்திரபாபு நாயுடு மீது தாக்கு

அப்போது ரோஜா செல்வமணி பேசுகையில், "தேர்தலில் அமல்படுத்த முடியாத வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்பொழுது திட்டங்கள் அமல்படுத்துவதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று அப்பாவியாக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு நடிகையான என்னை விட அவர் சிறப்பாக நடிக்கிறார். அவருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.

தமிழ்நாட்டில் சனாதனம்

சனாதன தர்மத்தை காப்பாற்ற வந்த பீடாதிபதி போல தன்னைத்தானே காட்டிக் கொண்ட துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி திருமலையில் பசுக்களைகூட காப்பாற்ற முடியாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் அரசு இருப்பதை வேடிக்கை பார்க்கிறார். இவர் தமிழ்நாட்டில் போய் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார். பவன் கல்யாண் தனது படங்களை நடித்து முடித்து வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறார். மக்கள் பிரச்சனைகளை பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது" இவ்வாறு ரோஜா செல்வமணி விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+