திருப்பதி வந்தார் இலங்கை பிரதமர் ரணில்... உற்சாக வரவேற்பு... நாளை சாமி தரிசனம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஏழுமலையான் தரிசனத்திற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி மலைக்கு வந்தார்.
சாமி தரிசனத்திற்காக விமானம் மூலம் ரேணிகுண்டா வந்து சேர்ந்தார். அவரை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி லட்சுமிகாந்தம் வரவேற்றார்.

தொடர்ந்து கார் மூலம் திருப்பதி மலைக்கு சென்றார். அங்கு அவரை திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்றனர்.

இரவு திருப்பதி மலையில் ரணில் விக்கிரமசிங்கே தங்குகிறார். அதன் பின்னர் நாளை காலை ஏழு மலையானை கும்பிடுகிறார்.

தரிசனத்துக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே வருகையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications