திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. ஆய்வில் உறுதி! பக்தர்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்படும் லட்டில், ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார். இதனையடுத்து லட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். வீடியோவில் "திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் புனிதம் வாய்ந்த கோவில். இதற்கு முன் இருந்த ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின்போது, திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

tirupati andhra pradesh laddu

கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒய்.எஸ். ஜெகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைத்து வெட்கப்படுகிறேன். இதனைச் சரிசெய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை" என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், லட்டுக்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. சோதனை முடிவுகள் குறித்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள கால்நடை மற்றும் உணவு ஆய்வு மையத்தின் (CALF) ஆய்வகம் விளக்கமாக அறிக்கை அளித்திருக்கிறது.

andhra pradesh laddu

இதில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவை லட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி, சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் எண்ணெய் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+