திருப்பதி கோயிலில் சிலுவையா.. உறைந்து போன பக்தர்கள்.. சிக்கிய நபரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
திருப்பதி கோயில் அலங்கார விளக்கு குறித்து சர்ச்சையாக பதிவிட்டவர் கைதானார்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர விளக்குகள் சிலுவை வடிவில் இருப்பதாக ஒருத்தர் சொல்லிவிட்டார்... கடைசியில் அவரை ஸ்டேஷனில் தூக்கி உட்கார வைத்துவிட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடப்பது வழக்கம்... இதுபோன்ற உற்சவங்களின்போது, கோயில் கோபுரங்களை சுற்றி லைட்டுகள் வைத்து அலங்கரிப்பார்கள்.. அதுபோன்று அலங்கரிக்கப்படும் லைட்டுகளில் அனுமன், கருடன், பூரண கும்ப கலசம் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்படுவதும் வழக்கம்.

அப்படித்தான், இந்த வருட வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் கோபுரத்தை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. பூரண கும்பத்தை போன்றும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. ஆனால், இந்த அலங்காரம் சிலுவை போல இருப்பதாக சிலர் சொல்லி உள்ளனர்.
"தால பத்ரா நிதி" என்ற நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பூரண கும்ப கலசம் என்று கூறி, சிலுவையை மின் அலங்காரம் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.. அத்துடன், அந்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளனர். இந்த பதிவுதான் படுவைரலாகி, கடைசியில் சர்ச்சையாகவும் மாறிவிட்டது. பக்தர்களிடையேயும் அதிர்ச்சி நிலவியது.
தவறாக சித்தரிக்கப்பட்ட இந்த போட்டோவுடன் கூடிய பதிவு, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும், புனிதமான கோவிலில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் பக்தர்களிடையே வீண் புரளியை கிளப்பி வருவதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசாரும் பூரண கும்ப கலசத்தை சிலுவையாக இருப்பதாக கூறி, தாலா பத்ரா நிதி பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications