Tirupati: இன்று சந்திரகிரகணம்! திருப்பதி ஏழுமலையான் கோயில் 10 மணி நேரம் மூடல்!
திருப்பதி: மார்ச் 3 ஆம் தேதியான இன்று சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது. சுமார் 10 மணி நேரத்திற்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாது.
சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை ஸ்ரீவாரி கோவில் நடை சாத்தப்படும். (சந்திர கிரகணத்தின் உண்மையான நேரம் மதியம் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை). வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸ், ராம் பாகிச்சா மற்றும் சி.ஆர்.ஓ மையங்களில் பக்தர்களுக்கு சுமார் 40,000 புளியோதரை பொட்டலங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி இன்று அஷ்டதள பாத பத்மராதனா சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கார சேவை, ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அன்று ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோயில் நடை இரவு 7.30 மணி வரை அடைக்கப்பட்டு இருக்கும். இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, பக்தர்கள் வழக்கம் போல் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். திருமலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படாது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications