Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதியில் நீண்ட நேரம் கியூவில் காத்திருக்கிறீர்களா? தேவஸ்தானத்தின் புதிய ப்ராஜக்ட் தயார்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதியில் பக்தர்களின் சிரமங்களை போக்க தேவஸ்தானம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். புரட்டாசி மாதம், பிரம்மோற்சவம், தொடர் விடுமுறை நாட்கள், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்கள், ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் அலைமோதும்.

TTD is going to do permanent queue with all amenities

இதனால் தர்ம தரிசனத்திற்கு 24 மணி நேரத்தை தாண்டி பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் எழுகிறது. இது பக்தர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை கொடுக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி அசம்பாவிதம் ஏற்படும் நிலையும் இருக்கிறது. இதனால் பக்தர்களின் பிரச்சினைகளை போக்க என்ன செய்யலாம் என தேவஸ்தானம் ஆலோசனை செய்தது.

அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாக அதிகாரி அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தானத்தின் சென்னை, புதுவை மண்டல ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுடன் கருணாகர ரெட்டி பேசுகையில் திருப்பதி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கோ மந்திரம், கோ பூஜை நிலையம் அருகே ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரஹ ஹோமம் என்ற பெயரில் இடைவிடாது ஹோமம் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் வசிக்கும் 140 கோடி இந்துக்களும் தங்களுடைய விசேஷ நாட்களில் அங்கு வந்து சங்கல்பம் செய்து ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். இதற்குரிய கட்டணம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். விசேஷ மற்றும் விடுமுறை நாட்கள் திருப்பதி மலைக்கு அதிக பக்தர்கள் வரும் நிலையில் இலவச தரிசனத்திற்காக அவர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

TTD is going to do permanent queue with all amenities

பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகளில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதை நேரில் ஆய்வு செய்து தெரிந்து கொண்டோம். எனவே 18 கோடி ரூபாய் செலவில் 7 கி.மீ. தூரத்திற்கு புட்கோர்ட், கழிவறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட நிரந்தர வரிசையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் தேவஸ்தானத்தின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் திருப்பதி மலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க பல்வேறு சாலைகளை மேம்படுத்தவும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை தேவஸ்தானமே மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவஸ்தானத்தின் வருமானத்தில் ஒரு சதவீதத்தை திருப்பதி வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ள கோயில்களில் மிக பழமையானதாக இருக்கும் கோபுரங்களை ஆய்வு செய்து அவற்றை புனர் நிர்மாணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+