தமிழகத்தை உலுக்கிய பல்லடம் படுகொலை.. உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..போலீசார் குவிப்பு
திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை பலியானவர்களின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த மோகன் ராஜ், பாஜக நிர்வாகி என்றும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் அருகில் மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் படுகொலை வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள், ஊர்மக்கள், மற்றும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 500 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பு அணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உறவினர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம். உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications