கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பாதித்த 22 வயது திண்டுக்கல் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்தார்.

A 22-year old Dindigul youth dies in Trippur due to coronavirus

கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று திரும்பிய நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கணேசன் கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வார காலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை 3 மணிக்கு கணேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் திண்டுக்கல், திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இது முதல் கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+