திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவினர் விமர்சித்தால் அதிமுக தாங்கிக்கொள்ளனும் - சி.பி.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

Google Oneindia Tamil News

திருப்பூர்: பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தால் அதிமுக தாங்கிக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவை காங்கிரஸ் இல்லாத கட்சிகளின் தலைமையிலான அரசுகள் 15 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கின்றன.

பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய 'புள்ளி’..! 5 பேரில் 3 சின்னப்பசங்க வேற! திடுக்கிட்ட போலீசார்பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய 'புள்ளி’..! 5 பேரில் 3 சின்னப்பசங்க வேற! திடுக்கிட்ட போலீசார்

இதில் பிரதமர் நரேந்திர மோடி, 8 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார்.

இந்தியாவின் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 24 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைந்து இருக்கிறது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று உள்ளது. உலக நாடுகளின் பசி, பட்டினியை போக்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட்டில் வேளாண்மையில் 8.5 சதவீதமாக இருந்த நிதிஒதுக்கீட்டை 38.8 சதவீதமாக உயர்த்தியது பாஜக அரசு.

தமிழக நலன்

தமிழக நலன்

55 கோடி மக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வது ஜி.எஸ்.டி. வரி காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளது.

அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும்

அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும்

புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மக்களை முட்டாளாக்கும் வேலையை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு செய்து வருகிறது. அதிமுகவை சேர்ந்த சிலர் பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். தங்களின் கட்சி வளர்ச்சி அடைவதற்காக அவரவர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பாஜக விமர்சனம் செய்தால் அதிமுக அதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

திமுக அரசு மத்திய அரசின் நிதியால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்து வருகிறது. இந்த போக்கை திமுக அரசு கைவிட வேண்டும். திருப்பூரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு மறைந்த பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பெயரை வைக்க வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.

English summary
ADMK should tolerate BJP's criticism - C.P.Radhakrishnan: பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தால் அதிமுக தாங்கிக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X