திண்டுக்கல் பெண்ணுக்கு எமனமாக மாறிய புத்தம் புதிய ஆட்டோ.. திசை மாறிய திருப்பூர் இளைஞரின் வாழ்க்கை
திருப்பூர்: திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சோ்ந்த ரவி என்ற இளைஞர் அண்மையில் தான் ஷோருமுக்கு சென்று புத்தம் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி உள்ளார். அந்த ஆட்டோவிற்கு புதிய பதிவெண் கிடைத்தது. அந்த புதிய பதிவெண் வாங்கிய கையோடு, போயம்பாளையம் சென்றார். அப்போது தான் திருப்பூரில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புதிய ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. இதனால் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்தது.
புதிய வாகனங்கள் வாங்குவோர் கவனமாக ஓட்டி செல்ல வேண்டும். ஏனெனில் கட்டுப்பாட்டை இழந்து தவறு நடந்தால், வாங்கியவரின் வாழ்க்கை மட்டுமல்ல எதிரே வருபவரின் வாழ்க்கையும் காலியாகிவிடும். அப்படித்தான் திருப்பூரில் நடந்துள்ளது, திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சோ்ந்த 26 வயதாகும் ரவி என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ஆட்டோ வாங்கி உள்ளார்.

தனது புதிய ஆட்டோவுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய பதிவெண் கிடைத்தது. இதையடுத்து பதிவெண்ணை எழுதி ஆட்டோவில் பொருத்துவதற்காக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு திருப்பூர் போயம்பாளையம் நோக்கி சென்றார். பின்னர் அங்கு புதிய பதிவெண்ணை நம்பர் பிளேட்டில் எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் தனது வீடு உள்ள பொல்லிகாளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருப்பூர் நெசவாளர் காலனி அருகே ஆட்டோ ரவி வேகமாக வந்த போது, திடீரென்று ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்த பயணிகள் கூட்டத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற திருப்பூரில் வசித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த திலகா (70), திருப்பூர் குமாரனந்தபுரம் அப்துல்லா (45), அவருடைய மனைவி பல்கீஷ்நிஷா (40), புளியம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலகா மற்றும் அப்துல்லா ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். மேலும் மகேஸ்வரி, பல்கீஷ் நிஷா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் புதிய ஆட்டோவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications