திண்டுக்கல் சென்றுவிட்டு ரிட்டன்.. கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னத்தம்பி.. இப்போது எங்கு உள்ளது?
திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.
Recommended Video

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.
கடந்த ஜனவரி 25ம் தேதி கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில் இருந்து சின்னத்தம்பி யானை இடமாற்றம் செய்யப்பட்டது. சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அங்கிருந்து அது தப்பித்து வெளியே வந்தது. தற்போது இது மீண்டும் தடாகம் காட்டு பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

நேற்று எங்கு இருந்தது
நேற்று சின்னத்தம்பி யானையின் கூடாரம் காலி செய்யப்பட்டதால் அது உடுமலைப்பேட்டை வயல் பகுதிகளுக்குள் சென்றது. இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சின்னத்தம்பி யானை சென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்றது.

இன்று காலை
இந்த நிலையில் இன்று காலை சின்னதம்பி மீண்டும் திருப்பூர் மாவட்ட பகுதிக்கு திரும்பியது. திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது. அங்கிருக்கும் கரும்புகளை சாப்பிட்டுக்கொண்டு, தோட்டத்தின் நடுவில் முகாமிட்டபடி இருக்கிறது.

கும்கி யானை
சின்னத்தம்பி யானையை கும்கி யானை வைத்து கூட சரியாக விரட்ட முடியவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். சின்னத்தம்பியை விரட்ட வந்த கும்கி யானையான மாரியப்பனுடன் சின்னத்தம்பி மிகவும் நட்புடன் பழகியது குறிப்பிடத்தக்கது. அதனால் சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட கும்கி யானையை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.

தாமதம்
சின்னத்தம்பியை விரட்டுவது தற்போது தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு சிரமமான விஷயமாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் சின்னத்தம்பி முகாமிட்டு முகாமிட்டு செல்வதால் அதை விரட்டுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சின்னத்தம்பி அடர்ந்த காட்டு பகுதிக்கு செல்ல ஒரு வாரமாவது எடுக்கும் என்று கூறுகிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications