திண்டுக்கல் சென்றுவிட்டு ரிட்டன்.. கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னத்தம்பி.. இப்போது எங்கு உள்ளது?
திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.
Recommended Video

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.
கடந்த ஜனவரி 25ம் தேதி கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில் இருந்து சின்னத்தம்பி யானை இடமாற்றம் செய்யப்பட்டது. சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அங்கிருந்து அது தப்பித்து வெளியே வந்தது. தற்போது இது மீண்டும் தடாகம் காட்டு பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

நேற்று எங்கு இருந்தது
நேற்று சின்னத்தம்பி யானையின் கூடாரம் காலி செய்யப்பட்டதால் அது உடுமலைப்பேட்டை வயல் பகுதிகளுக்குள் சென்றது. இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சின்னத்தம்பி யானை சென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்றது.

இன்று காலை
இந்த நிலையில் இன்று காலை சின்னதம்பி மீண்டும் திருப்பூர் மாவட்ட பகுதிக்கு திரும்பியது. திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது. அங்கிருக்கும் கரும்புகளை சாப்பிட்டுக்கொண்டு, தோட்டத்தின் நடுவில் முகாமிட்டபடி இருக்கிறது.

கும்கி யானை
சின்னத்தம்பி யானையை கும்கி யானை வைத்து கூட சரியாக விரட்ட முடியவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். சின்னத்தம்பியை விரட்ட வந்த கும்கி யானையான மாரியப்பனுடன் சின்னத்தம்பி மிகவும் நட்புடன் பழகியது குறிப்பிடத்தக்கது. அதனால் சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட கும்கி யானையை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.

தாமதம்
சின்னத்தம்பியை விரட்டுவது தற்போது தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு சிரமமான விஷயமாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் சின்னத்தம்பி முகாமிட்டு முகாமிட்டு செல்வதால் அதை விரட்டுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சின்னத்தம்பி அடர்ந்த காட்டு பகுதிக்கு செல்ல ஒரு வாரமாவது எடுக்கும் என்று கூறுகிறார்கள்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications