மகளிருக்கு முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கும் ஸ்டாலின்? திருப்பூரில் தொடங்கிய திமுக மகளிர் அணி மாநாடு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மகளிருக்கு முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாக அரசியல் கட்சிகள் தற்போதே பிரசார பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

திமுக மகளிர் அணி மாநாடு
குறிப்பாக ஆளும் திமுக மண்டல வாரியாக இளைஞர் அணி, மகளிர் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது..
இந்த மாநாட்டுக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கனிமொழி தலைமை தாங்குகிறார். முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த மாநாட்டில் மகளிருக்கான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1.5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்
இந்த மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மொத்தம் 1.5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்துள்ளனர். மைதானம் முழுவதும் சிவப்பு நிற தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளது.
2,500 போலீசார் பாதுகாப்பு
அதேபோல, 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கையும் போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. டாய்லெட் வசதி, குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதியும் செய்து தரப்படுகிறது. ஸ்னாக்ஸ் உள்ளிட்டவையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு திடல் முழுவதும் திமுக கொடிக்கம்பங்கள், மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்த ஏதுவாக 140 ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை - திருச்சி நெடுஞ்சாலை அருகே மாநாடு நடைபெற இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர். இந்த மாநாட்டுக்காக சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி












Click it and Unblock the Notifications