திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம்
திருப்பூர் : திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் மாநகராட்சியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் முடித்துக் கொடுத்த பணிகளுக்கு பில் தொகையை விடுவிக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள சுப்பிரமணியன் 5 லட்சம் லஞ்சம் கேட்டாராம். அவரிடம் ஐந்து லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை ஏற்பாட்டில் முருகன் கொடுத்துள்ளார். அப்போது சுற்றி வளைத்து என்ஜினியர் சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருகிறார். மாநகராட்சியின் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர் ஒப்பந்தம் எடுத்து முடித்துள்ளார். தான் முடித்துக் கொடுத்த மூன்று பணிகளுக்கான தொகையைப் பெறுவதற்காக, மூன்றாவது மண்டல இளநிலை பொறியாளரான சுப்பிரமணியனை முருகன் அணுகியுள்ளார்.

அப்போது, அந்தப் பணிகளுக்கான தொகையை விடுவிக்க வேண்டுமானால் தனக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் கேட்டுள்ளார். மேலும், முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாயை உடனடியாகத் தர வேண்டும் என்று அவர் கறாராகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொறியாளர் சுப்பிரமணியனைப் பிடிக்க போலீசார் ஒரு திட்டத்தைத் தீட்டினர். அதன்படி, ரசாயனம் தடவிய 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை முருகனிடம் கொடுத்து, அதனை சுப்பிரமணியனிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இதற்கிடையில், பணம் தயாராக இருப்பதாக முருகன் தகவல் தெரிவிக்கவே, திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையத்திற்கு வருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், முருகன் பணத்தைக் கொடுத்தபோது சுப்பிரமணியனைச் சூழ்ந்து பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் ஏற்படும் விளைவுகள் என்ன
அரசுப் பணியில் இருந்து கொண்டு லஞ்சம் வாங்கி பிடிபடும் ஊழியர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும். முதலில், அவர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.
மேலும், நீதிமன்ற விசாரணையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு தண்டனை பெறும் ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்காலப் பலன்கள் அனைத்தையும் இழக்க நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தில் அவர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் சிதைந்து, குடும்பத்தினரும் தலைகுனிய வேண்டிய சூழல் உருவாகும். நேர்மையான முறையில் மக்கள் பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்கள், இதுபோன்ற தவறான வழிகளில் ஈடுபடுவது அவர்களின் வாழ்நாள் முழுவதையும் இருளாக்கிவிடும்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!














Click it and Unblock the Notifications