காங்கேயம் மல்லுக்கட்டு... தயங்கும் தனியரசு... தாராளம் காட்டும் வெள்ளக்கோவில் சாமிநாதன்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் கொரோனா கால நிவாரணப் பணிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தனியரசு தயக்கம் காட்டும் நிலையில், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாராளம் காட்டி வருகிறார்.
காங்கேயம் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காளை தான். காங்கேயம் காளை எந்தளவிற்கு பிரபலமோ அதே அளவு அரசியலிலும் காங்கேயம் தொகுதி முக்கியத்துவம் பெற்றது எனக் கருதலாம். ஏனெனில் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு தொகுதிகளில் காங்கேயமும் ஒன்று.

ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சர் பதவியேற்ற போது அவரை வெற்றி பெற வைத்த தொகுதி என்பதால் காங்கேயம் எப்போதுமே அதிமுகவுக்கு ஸ்பெஷல் தான். திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியாரை வீழ்த்தி ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த காங்கேயம் பின்னர் அதிமுகவின் கோட்டையாக மாறியது.

இந்நிலையில் அதனை திமுகவின் கோட்டையாக மாற்ற பம்பரமாக சுழன்று வருகிறார் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன். தனது சொந்த கிராமமான முத்தூரை உள்ளடக்கிய காங்கேயம் தொகுதிக்குள் மட்டும், கொரோனா கால நிவாரணமாக இதுவரை 92,700 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பை வழங்கியுள்ளார் சாமிநாதன்.
சென்னிமலை, குண்டடம், காங்கேயம், வெள்ளக்கோவில் என அனைத்து ஒன்றியங்களிலும் வீடு தவறாமல் அரிசி பைகளை விநியோகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன், இதுவரை நிவாரணப் பணிகளுக்காக மட்டும் தனது சொந்த நிதியில் இருந்து ஒன்றே முக்கால் கோடி ரூபாய் செலவழித்துள்ளாராம்.

வெள்ளக்கோவில் சாமிநாதன் களத்திற்கு வரமாட்டார், மக்களை சந்திக்க மாட்டார் என தன்னை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து தனது எதிர்க்கோஷ்டியினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒன்றியம் வாரியாக கிராமம் கிராமமாக நிவாரணப் பொருட்களை இவரே நேரில் சென்று வழங்குவதுடன் பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்று காங்கேயம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தனியரசு, கொரோனா காலத்தில் தங்களை கண்டுகொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகாராக உள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications