திருப்பூர் திருமூர்த்தி மலையில் புதிய சாலை அமைக்கும் திட்டம்.. உடனே நிறுத்த தமிழக அரசு முடிவு
திருப்பூர் : ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, பதில் அளித்த தமிழக அரசு, ஆனைமலை புலிகள் காப்பகம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருக்கிறது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூரைச் சேர்ந்த கெளதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறுகையில், "ஏற்கனவே இப்பகுதியில் கான்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்துவிடும். வாகனப் போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடிச் செல்லும் விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தாகும்.
அத்துடன் புதிய சாலையால் நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிக்கும் ஏற்படும்.. எனவே புதிய சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும்" என வனத்துறை அதிகாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக விளக்கமளிக்க தமிழக அரசுத் தரப்பில் அவகாசம் கேட்ட போது, 'குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டன.' என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சாலைப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்துவதாக அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications