திருப்பூரில் வெடித்தது குண்டு! உளவுத்துறை என்ன செய்தது? உடனே விசாரிக்கணும்.. அரசுக்கு பறந்த கோரிக்கை
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற வெடி விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பாண்டியன் நகர் பகுதியில் சத்யா காலணியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிச் சத்தம் கேட்டது.

இதில் கார்த்தியின் வீடு சேதம் அடைந்ததோடு அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து நில அதிர்வு அந்த பகுதியில் ஏற்பட்ட நிலையில் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில், திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திருப்பூர் பாண்டியன் நகரில் மளிகை கடை மற்றும் வீடு ஒன்றில் வெடிகுண்டு தயாரித்து வந்ததாக தெரிகிறது. மர்மமான முறையில் இன்று (8.10 .24- செவ்வாய் ) மதியம் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் சுற்றி இருந்த பல வீடுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதியில் ஆபத்தான வெடி மருந்துகள் மிக அதிக அளவில் எப்படி எடுத்து வரப்பட்டது என்பது உட்பட பல சந்தேகங்களை இச்சம்பவம் எழுப்பி இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் வெடிக்காத நிலையில் பெரிய உருண்டை வடிவிலான குண்டுகள் இருப்பதை காணமுடிந்தது. இதுக்கு மேலாக அங்கு வெடி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய அளவில் வெடி மருந்துகள் வெளியே எடுத்து வரப்படுவதும், கொண்டு செல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இது எப்படி காவல்துறைக்கு தெரியாமல் போனது, உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழக அரசு சித்தாந்த எதிரிகளை பழி வாங்குவதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி வருகின்றது. இது போன்ற சட்டவிரோத, வெடிமருந்து பதுக்கல்களையும் வெடிகுண்டு தயாரிப்பு சம்பவங்களையும் உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் அரசு கவனத்தில் கொள்வதில்லை.
உளவுத்துறை மற்றும் காவல் துறையை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது. மக்கள் நலன், மக்கள் உயிர் போன்றவற்றை துச்சமாக மதித்து தமிழக அரசு செயல்படுகிறது. காவல்துறையையும் உளவுத்துறையையும் புதுப்பித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
மேலும் இந்த வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு தலா 50 லட்சமும், காயமுற்றவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி அறிவிக்க வேண்டும். வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு மொத்த செலவையும் அரசே ஏற்றுக்கொண்டு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது." என கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications