திருப்பூரில் பயங்கரம்! நள்ளிரவில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படு கொலை! ஒருவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டருகே 3 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். திருப்பூர் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாலமுருகன் பிணமாக கிடந்துள்ளார். நள்ளிரவு 4 மணியளவில் 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த திருப்பூர் மாநகர போலீசார் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications