பாயிண்டை பிடித்த அரசு ஊழியர் .. ஒரே குற்ற எண்ணில் 2 வழக்குகள் எப்படி.. ஹைகோர்ட்டில் திருப்பம்
திருப்பூர்: தனது தாய்க்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்று பெற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் நாகராஜன் லஞ்சம் கேட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே குற்ற எண்ணில் எப்படி 2 வழக்குகள் பதிவு செய்ய முடியும் என்று திருப்பூர் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தது உறுதியானாலோ அல்லது லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கினாலோ, அவர்கள் தப்பிப்பது மிக கடினம். அவர்களின் சர்வீஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள். சஸ்பெண்ட் நடவடிக்கையும் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் மீது பாயும்.

அதேபோல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி அதிக அளவில் சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்களுக்கு போதிய ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு போனாலும், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் எந்த சமரசமும் அடுத்து கிடையாது.
நீதிமன்றத்தில் போய், முறையிட்டு வழக்கில் இருந்து விடுதலையாகி வருவது தான் அரசு ஊழியர்களுக்கு உள்ள ஒரே வழியாகும். அப்படித்தான் திருப்பூரில் வருவாய் ஆய்வாளர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வியை பற்றி பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், தனது தாய்க்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்று பெற விண்ணப்பத்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது அறிக்கை அளித்து, தாசில்தாருக்கு பரிந்துரை செய்வதற்காக வருவாய் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அசோக்குமார் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மீது திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தைல் வருவாய் ஆய்வாளர் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பூர் வருவாய் ஆய்வாளர் நாகராஜனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதற்கு சில நாட்கள் முன்பு, அதே குற்ற எண்ணில், அதே புலன் விசாரணை அதிகாரி வேறொரு நபருக்கு எதிராக வழக்கை பதிவு செய்திருக்கிறார் என்று கூறி அந்த ஆவணத்தை மனுதாரர் தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார்.
இதை படித்து பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, 'ஒரே குற்ற எண்ணில் 2 வழக்குகள் எப்படி பதிவு செய்ய முடியும்?' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கை பதிவு செய்த திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications