Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் அருகே மாமியாரை கொன்ற மருமகன் 14 வருடங்கள் கழித்து கைது.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாமியாரை வெட்டிக் கொலை செய்து விட்டு, மனைவியையும் வெட்டி விட்டு தப்பி ஓடியவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைதாகி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்த ராஜன், சம்பவம் நடந்த 14 வருடங்களுக்கு முன்பு தப்பி ஓடியவர், சிக்கவே இல்லை.. யாருக்கும் தெரியாமல் அடையாளத்தை மாற்றி, மங்களூரில் வேலை செய்தவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி-காளியம்மாள் தம்பதிக்கு பத்மாவதி என்ற மகள் இருந்தார். பழனிச்சாமி, காளியம்மாள் தம்பதி,கர்நாடகா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்த பரமசிவம் மகன் ராஜன்(வயது 45) என்பவருக்கு தங்கள் மகன் பத்மாவதியை திருமணம் செய்து வைத்தனர். ராஜன், பத்மாவதி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் கணவனுடன் கோபித்துக் கொண்டு பத்மாவதி குழந்தைகளுடன் தாய் வீடான மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டிக்கு வந்துள்ளார்.

tirupur crime

இந்த நிலையில் மனைவியைத் தேடி வேடப்பட்டி வந்த ராஜன் அவரை தன்னோடு வாழ வருமாறு அழைத்திருக்கிறார். அதற்கு பத்மாவதி வர மறுத்தார். தன் மனைவி தன்னோடு வராமல் போனதற்கு மாமியார் காளியம்மாள் தான் காரணம் என்று ராஜன் நினைத்துள்ளார். அதனால் கடந்த 28-06-2010 அன்று இரவு 10 மணியளவில் அரிவாளால் மாமியாரின் தலையை வெட்டி பயங்கரமாக கொலை செய்தார். மேலும் மனைவி பத்மாவதியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.

இதனிடையே பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவதியை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ராஜன் அதற்குள் எங்கோ ஓடிச்சென்று தலைமறைவானார். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த போலீசார் காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காளியம்மாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் செய்யப்பட்டது.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை தேடி வந்தனர். இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் ராஜன் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மங்களூருக்கு விரைந்து சென்ற மடத்துக்குளம் போலீசார் ராஜனை கைது செய்து மடத்துக்குளம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் குற்றவாளியை கைது செய்த போலீசாரை வெகுவாக பாராட்டினார்,. பின்னர் ராஜனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+