இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு?
திருப்பூர்: இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். மாபெரும் வெற்றியை அடையச் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி
இந்த விழாவில் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில் இந்தியா மிகச் சிரமத்தில் உள்ளது. பிற்போக்குவாதிகளை அப்புறப்படுத்துவது எளிதல்ல. தேசத்தை முன்னேற்றும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரம்
மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் இல்லாத போது நாம் வெற்றி பெற்றோம். இதை நாம் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் செய்ய வேண்டும். இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். இந்த போராட்டம் மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது பெற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பாஜக கூட்டணி
குடியரசுத் தலைவர் தேர்தலிலும் சரி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் சரி பாஜக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைய அக்கட்சி பல வகையான யுத்திகளை கையாண்டு வருகிறது. விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம், புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்
அது போல் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி போன்றவற்றை கண்டித்து நாடாளுமன்றத்திலும் அனல் பறக்கும் விவாதங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் களத்தில் இறங்கி போராடுகிறார்கள். இனி இவர்களது முன்னெடுப்புகள் தீவிரமாக இருக்கும் என்றே தெரிகிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications