மகளிர் உரிமை தொகை + 5000.. திமுக தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.. திமுக ஆதரவாளர் பதிவு
திருப்பூர்: திமுக தோல்வி அடைய விஜய் ரசிகர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் கூட, முக்கிய காரணமாக இந்த 1.31 கோடி பெண்களில் பாதியும், மகளிர் உரிமை தொகையும், 5,000 ரூபாயும் கிடைக்கப்பெறாத பெண்கள் தான் தவெக வெற்றியை தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை, பாஜக வழக்கு போட்டு மகளிர் தொகையை நிறுத்தியிருந்தால் கூட, அது திமுக மேல் வெறுப்பை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், பெண்களிடம் நற்பெயரை பெற வேண்டும் என்கிற நோக்கில் ஒரே நேரத்தில் 5,000 ரூபாய் அனுப்பியது, அதை வாங்காதவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது என திமுக ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளார்.
திமுக ஆதரவாளர் பிரகாசம் பழனி என்பவர் திமுக தோல்வி ஏன் என்பது குறித்து தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனை அப்படியே பார்ப்போம்.

எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு திமுக ஆதரவு குடும்பம் இருக்கு. தவெக ஆட்சி பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது அந்த நபர் திடீரென விஜய்யை ஆதரித்து பேசினார். எனக்கு ஆச்சர்யம்...!!
"டேய்...என்ன மச்சி திடீர்னு விஜய்க்கு ஆதரவா பேசுற..."?
"இந்த தேர்தல்ல எங்க மொத்த குடும்பமும் விஜய்க்கு தான் ஓட்டு போட்டோம்" என சொல்லிவிட்டு சிரித்தான்.
"அடப்பாவி....ஏண்டா....? உங்க குடும்பமே திமுக ஆதரவு தானே...? 2021-ல் சூரியனுக்கு தானே ஓட்டு போட்டீங்க..."?
"ஆமா....உண்மை தான். ஆனா, மூனு வாட்டி எழுதிக் கொடுத்தும் என் ஒய்ஃபுக்கு இப்ப வரை மகளிர் உரிமைத் தொகை வரல. உன்னோட அம்மாவுக்கு மாசம் 1,000 ரூபாய் வருது. ஆனா, எங்களுக்கு வரலையே...எங்களுக்கு எதன் அடிப்படையில் கொடுக்கலைனு இப்ப வரை தெரியலையே.."
"சரி டா...1,000 ரூபாய்க்காக கட்சி மாறி ஓட்டு போடுவீங்களா..."?
"நீ சொல்றது கூட சரி தான் மச்சி...ஆனா, கடைசியா சுளையா 5,000 ரூபாய் போட்டாங்களே...அது கூட எங்களுக்கு வரல...அந்த பணம் கிடைச்சிருந்தா எவ்வளவு உதவியா இருந்திருக்கும் தெரியுமா....அந்த வேதனை உனக்கு புரியாது மச்சி. அந்த கடுப்புல தான் தவெக கட்சிக்கு ஓட்டு போட்டோம்..."
"இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்ல மச்சி..."
"இன்னொரு விஷயம் கூட இருக்கு மச்சி....திமுக ஆட்சிக்கு வந்தா 2,000 ரூபாய் தருவோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சு பாரு...திமுக வந்தால் 2,000 ரூபாய் கொடுப்பாங்க தான். ஆனா, எங்களுக்கு கிடைக்காதே...ஏற்கனவே 1,000 ரூபாய் வாங்கினவங்க தானே இந்த 2,000 ரூபாயும் வாங்குவாங்க...அப்ப, எங்களுக்கு ஒவ்வொரு மாசமும் எவ்வளவு வேதனையா இருக்கும்..."
"ஹ்ம்ம்ம்ம்ம்...."
"ஒருவேளை, திமுக எல்லா ரேஷன் அட்டைகளுக்கும் 2,000 ரூபாய்னு அறிவிச்சிருந்தால் நாங்க எல்லாரும் நிச்சயமாக சூரியனுக்கு ஓட்டு போட்டுருப்போம்...ஆனா, அப்படி வாக்குறுதி கொடுக்கலையே....அதனால் தான் தவெகவுக்கு ஓட்டு போட்டோம்.."
# எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. மகளிர் உரிமை தொகை தான் திமுக ஜெயிக்க காரணமா இருக்கும் என எல்லோரும் நம்பினார்கள். ஆனால், இதுவே திமுக ஆட்சிக்கு எமனாக மாறியிருக்கு.
அதுவும், ஒரு காலையில் பல்க்காக 5,000 ரூபாய் வந்தது, மகளிர் உரிமை தொகை பெறாதவர்களுக்கு ரொம்ப கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
1.31 கோடி பெண்களுக்கு மகளிர் தொகை போகும் என்றால், இதை வாங்காத 1 கோடி பெண்கள் நிச்சயமாக கோபத்துடன் தான் இருந்திருப்பார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த 1 கோடி பெண்களுக்கும் 2,000 ரூபாய் கிடைக்காது தானே..? அப்புறம் எப்படி இவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள்.
1,000 ரூபாய் மற்றும் 5,000 ரூபாயை வாங்கிய அத்தனை பெண்களும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இவர்களில் அதிமுக, நாதக மற்றும் தவெக ரசிகர்களும் இருக்க தானே செய்வார்கள்....? அப்புறம் எப்படி 1.31 கோடி பெண்களும் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள் என எதிர்ப்பார்க்க முடியும்...?
இந்த தேர்தலில் திமுக தோல்வி அடைய விஜய் ரசிகர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் கூட, முக்கிய காரணமாக இந்த 1.31 கோடி பெண்களில் பாதியும், மகளிர் உரிமை தொகையும், 5,000 ரூபாயும் கிடைக்கப்பெறாத பெண்கள் தான் தவெக வெற்றியை தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை, பாஜக வழக்கு போட்டு மகளிர் தொகையை நிறுத்தியிருந்தால் கூட, அது திமுக மேல் வெறுப்பை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், பெண்களிடம் நற்பெயரை பெற வேண்டும் என்கிற நோக்கில் ஒரே நேரத்தில் 5,000 ரூபாய் அனுப்பியது, அதை வாங்காதவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த 5,000 ரூபாயை அனுப்பாமலும், தேர்தல் வாக்குறுதியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2,000 ரூபாய் என அறிவித்திருந்தால் நிச்சயமாக திமுக வெற்றி பெற்றிருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன்!!" இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications