Kumbh Mela:'கும்பமேளா'வுக்காக கூட்டமாக வட இந்தியாவுக்கு கிளம்பிச் சென்ற தொழிலாளர்கள்.. திணறிய திருப்பூர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: வட இந்தியர்களின் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றான 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் ரயில்களில் புறப்பட்டதால் திருப்பூர் ரயில் நிலையம் திணறித்தான் போனது.

மகா கும்பமேளா இந்து புராணங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகில் மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இது உள்ளது . இந்த புனித நிகழ்வு இந்தியாவில் உள்ள ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நான்கு இடங்களில் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. கங்கை முதல் ஷிப்ரா, கோதாவரி மற்றும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமம் வரை இவை ஒவ்வொன்றும் ஒரு புனித நதியைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கும்பமேளாவின் நேரமும் சூரியன், சந்திரன் மற்றும் வியாழன் ஆகியவற்றின் கிரக நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது ஆன்மீகத் தூய்மை மற்றும் சுய-அறிவொளிக்கான சிறப்பான காலத்தைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தின் வளமான மண்ணில் வேரூன்றியிருக்கும் மகா கும்பமேளா, மனிதகுலத்தின் உள்ளார்ந்த அமைதி, சுய-புரிதல் மற்றும் ஆன்மீக ஒற்றுமைக்கான காலமற்ற தேடலின் ஆழமான பிரதிநிதித்துவமாகும்.

maha kumbh mela 2025 2025

இந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் இன்று மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியது. மகா கும்பமேளா காலங்களில் வரும் புனிதமான நாட்களில் நீராடுவது என்பது ஐதீகம். இதனால் புனிதமான நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் ஒன்று திரண்டு புனித நீராடுவர். இந்த மகாகும்பமேளா பிப்ரவரி 26-ந் தேதி வரை நடைபெறும்.

கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மகா கும்பமேளா, ஒரு நிகழ்வு மட்டுமல்ல. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாகும்.

இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக திருப்பூர் மற்றும் கோவையில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் ரயில்களில் புறப்பட்டதால் திருப்பூர் ரயில் நிலையம் திணறித்தான் போனது. இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ரயில்வே போலீசார் மிகுந்த சிரமப்பட்டனர். அதுவும் மூட்டை முடிச்சுகளுடன் ஒட்டுமொத்தமாக பல நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பெரும்பாலான வட இந்திய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+