கடன் வாங்கி தேர்தல் செலவு! 50 வாக்குகள் கூட கிடைக்காத விரக்தியில் மநீம வேட்பாளர் விபரீத முடிவு!
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் போட்டியிட்டு 50 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெற்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மணி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேர்தல் செலவுக்காக இவர் ரூ.50,000 வரை கடன் வாங்கியிருந்ததாகவும் கடைசியில் 50 பேர் கூட தனக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே உயிரிழந்த மணியின் குடும்பத்திற்கு கமல்ஹாசன் என்ன உதவி செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக 37 வார்டுகளில் வென்றுள்ளது. எஞ்சிய வார்டுகளில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில் அந்த மாநகராட்சியில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர் டெபாசிட் தொகையை இழந்தனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் 36-வது வார்டு வேட்பாளர் மணி என்பவரும் 50 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெற்றதால் தனது வைப்புத் தொகையை தேர்தல் ஆணையத்திடம் பரிதாபமாக பறிகொடுத்தார்.

தேர்தல் செலவு
தேர்தல் செலவுக்கு கையில் பணம் இல்லாத நிலையிலும் கடனாக ரூ.50,000 வாங்கி அதைக் கொண்டு செலவுகளை கவனித்து வந்திருக்கிறார் மணி. இதனிடையே 36-வது வார்டில் வீடு வீடாக காலையும் மாலையும் ஓட்டுக்கேட்டுச் சென்ற மணி தன்னை எப்படியும் மக்கள் வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்ததால் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார்.

மன உடைந்து
கடந்த மூன்று நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கமல் கட்சியின் வேட்பாளர் மணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று தற்கொலை செய்துகொண்டார். இது மக்கள் நீதி மய்யம் கட்சியினரை மிகுந்த அதிர்ச்சி அடையச் செய்துள்ளதோடு கவலையும் கொள்ளச் செய்துள்ளது. தேர்தல் தோல்வியை தாங்க முடியாமல் ஏற்கனவே அதிமுக வேட்பாளரின் கணவர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கமல் தரப்பில்
இதனிடையே திருப்பூரில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் மனம் உடைந்து விபரீத முடிவை நாடிய மணியின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தரப்பில் என்ன மாதிரியான உதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications