ரூ.1.25 கோடி மதிப்பிலான நூலை வாங்கிக்கொண்டு மோசடி.. பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி கைது
திருப்பூர்: கரூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்பிலான நூலை பெற்று மோசடி செய்த பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). கரூரில் பணியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி (40) நடத்தி வரும் சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் நூலை கொடுத்து, தறியில் நெய்து துணியாக பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1 லட்சம் கிலோ நூலை, துணியாக மாற்றி தரும்படி ராமமூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.ஆனால் நூலை பெற்றுக்கொண்ட ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நூலின் மதிப்பு ரூ.1.25 கோடியாகும்.
இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, ராமமூர்த்தி நூல், துணி மற்றும் பணம் என எதையும் தரமுடியாது என மிரட்டியதாக அசோக் ராம்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அசோக் ராம்குமார் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் ராமூர்த்தி மீது கடந்த 30 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராமமூர்த்தியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், ராமமூர்த்தியின் மில்லில் காசாளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications