தாராபுரத்தில் பயங்கரம்.. எரிந்த நிலையில் பெண் சடலம்.. தீ வைத்துக் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எரிந்த நிலையில் கிடத்த மாற்றுத்திறனாளி பெண் சடலம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணை யரேனும் தீ வைத்து கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு பகுதியில் பழைய கோட்டைமேட்டு தெருவில், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில், 90 சதவீதம் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இருந்த அந்த பெண் மாற்றுத்திறனாளி என்பதும் அவரது இடது காலில், செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், தலைமுடி சற்றே வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவருக்கு வயது 65-க்கு மேல் இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த பெண் யார்? எதற்காக நகராட்சி தண்ணீர் தொட்டி அமைந்துள்ள அந்த இடத்திற்கு வந்தார்? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில், அந்தப் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்த தீப்பரவலில் சிக்கி அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு யாரேனும் தீ வைத்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications