கத்தியுடன் விரட்டிய இளைஞர்.. மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஓடிய காவலர்! வீரராகவ பெருமாள் கோயிலில் ஷாக்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு காரணமாகப் பெருந்திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நபர், திடீரெனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரைக் கத்தியுடன் துரத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியில் சொர்க்க வாசல் திறப்பு என்பது நடைபெறும். அதன்படி இன்றைய தினம் ஏகாதசி என்பதால் தமிழகம் முழுக்க உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதற்காகப் பெருந்திரளாகக் குவிந்த பக்தர்கள் சுவாமியைத் தரிசித்து வருகின்றனர்.

சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாகச் சென்று, பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை! இதன் காரணமாகச் சொர்க்க வாசல் திறப்பு நாளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிவார்கள். அதன்படி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதன் காரணமாகக் காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தக் காவலரைத் தாக்க முயன்றுள்ளார்.
தாக்குதலில் இருந்து தப்பிக்கச் சில அடி தூரம் அந்த காவலர் ஓடிய நிலையில், அவரை அந்த மர்ம நபர் கத்தியோடு துரத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் தனது பெல்ட்டை கழட்டிக் கத்திக் குத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். அத்தனை பேர் திரண்டிருந்தபோதும், காவலரை அந்த நபர் கத்தியோடு துரத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்கள் இணைந்து கத்தியுடன் இருந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
காவலரை அந்த நபர் கத்தியோடு துரத்திய நிலையில், அதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications