உங்கள் வீட்டில் எத்தனை கேஸ் கனெக்‌ஷன்.. மத்திய அரசு போட்ட புதிய ரூல்ஸ் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: எல்பிஜி இணைப்பிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வந்தது. அதன்படியே பலரும் மாறத்தொடங்கிவிட்டார்கள். பலர் வேகமாக மாறி வருகிறார்கள். இந்நிலையில் ஏற்கெனவே வீடுகளில் பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இனி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்வது முற்றிலும் தடை செய்துள்ளது மத்திய அரசு. இனி ஒரே நபர் அல்லது ஒரே வீட்டில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது.

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணைய் வழித்தடத்தின் இதயம் என்று அழைக்கப்படும் 'ஹார்முஸ் நீரிணை' மூடப்பட்டதால், இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர் கிடைக்க கிராமங்களில் 50 நாட்கள் வரை ஆகிறது. நகரங்களில் 36 நாட்கள் வரை ஆகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஹோட்டல்கள் சிலிண்டர் இல்லாத காரணத்தால் மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

The Central Introduces New Rules for lpg cylinder Only One Gas Connection Permitted Per Household

அந்த வகையில் நேற்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மார்ச் மாதத்தில், கணிசமான எல்பிஜி வாடிக்கையாளர்கள் 3 மாத காலத்திற்குள் எல்பிஜி இணைப்பிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியது. உதாரணமாக மெட்ரோ நகரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் உடனடியாக மாற அறிவுறுத்தப்பட்டனர். சிலிண்டர்களை மேல் தளங்களுக்குச் சுமந்து செல்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கவும், இடவசதியைச் சேமிக்கவும் இவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

அதேபோல் பெரிய அளவில் எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தும் வணிக அமைப்புகள் PNG-க்கு மாற அதிகம் அறிவுறுத்தப்பட்டனர். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை சமையலறைகள், கல்யாண மண்டபங்கள் போன்றவற்றை கேஸ் சிலிண்டருக்கு பதில், குழாய் வழி எரிவாயுவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என அரசு அறிவுறுத்தி வந்தது. அதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் வெப்பமூட்டும் தேவைகளுக்காக எல்பிஜி அல்லது பிற எரிபொருட்களைப் பயன்படுத்தி வந்தவர்கள் இயற்கை எரிவாயுவிற்கு மாற அறிவுறுத்தப்பட்டனர்

அதன் படி பலரும் பிஎன்ஜிக்கு மாற தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஏற்கெனவே வீடுகளில் பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இனி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதாவது, இனி ஒரே நபர் அல்லது ஒரே வீட்டில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது.

பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி இணைப்புகளைத் துண்டிப்பதற்கு அரசாங்கம் 30 நாட்கள் அவகாசம் வழங்கிஇருக்கிறது. எனினும் இந்த வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தால், எதிர்காலத்தில் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதற்காக ஒரு வவுச்சரைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் ஒரு விதியையும் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

ஒருவேளை வாடிக்கையாளர் எல்பிஜி இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை என்றால், அவர் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு சிறப்பு மாற்றுச் சீட்டைப் பெறலாம். இந்தச் சீட்டு எதிர்காலத்தில் அவர்களின் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறு முடியும்.

இந்த மாற்றுச் சீட்டுப்படி, நகரங்களில் இருக்கும் மக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறும்போது அவர்கள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டரை ஒப்படைப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு சிறிய நகரம், ஊர் அல்லது பிஎன்ஜி குழாய்கள் இல்லாத பகுதிக்கு மாறும்போது ஒரு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு நீண்ட ஆவணப் பணிகளையும் கணிசமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை இருக்கும்.

ஆகவே தான் அரசின் புதிய மாற்றுச் சீட்டு விதி எளிதாகும். அதாவது இந்த சீட்டை காண்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளில் தங்களது எல்பிஜி இணைப்பை எளிதாக உடனே மீண்டும் வாங்கிவிட முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+