தமிழகத்தில் முதல் முறையாக.. திருப்பூர் காய்கறி சந்தையில் வித்தியாசமான கிருமிநாசினி சுரங்கம்
திருப்பூர்: இந்தியாவில் முதல்முறையாக திருப்பூரில் காய்கறி சந்தையில் வித்தியாசமான முறையில் கிருமிநாசினி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயின் சமூக பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மைதானம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அது போல் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானங்களுக்கு கொண்டு சென்றுள்ளது அந்தந்த மாவட்ட நிர்வாகம்.

காய்கறி
ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவ வைக்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைத்துள்ளனர். இந்த பாதை வழியே காய்கறி வாங்குவோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

3 முதல் 5 வினாடிகள்
இந்த மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைக்கழுவ வைக்கிறார்கள். பின்னர் ஒரு கிருமி நாசினி சுரங்கம் எனும் பாதை வழியாக மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வழி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன. இந்த வழியை கடக்க 3 முதல் 5 வினாடிகள் ஆகும். இதை திருப்பூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.
|
நெட்டிசன்கள்
தமிழகத்தில் வேறெங்கும் கடைப்பிடிக்கப்படாத இந்த முயற்சியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொண்டு வந்துள்ளார். இது மாதிரியான புது முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது போல் அனைத்து மாவட்டங்களிலும் சுத்தத்தை கடைப்பிடித்தால் கொரோனாவை எளிதாக ஒழிக்கலாம் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications