தமிழகத்தில் முதல் முறையாக.. திருப்பூர் காய்கறி சந்தையில் வித்தியாசமான கிருமிநாசினி சுரங்கம்
திருப்பூர்: இந்தியாவில் முதல்முறையாக திருப்பூரில் காய்கறி சந்தையில் வித்தியாசமான முறையில் கிருமிநாசினி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயின் சமூக பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மைதானம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அது போல் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானங்களுக்கு கொண்டு சென்றுள்ளது அந்தந்த மாவட்ட நிர்வாகம்.

காய்கறி
ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவ வைக்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைத்துள்ளனர். இந்த பாதை வழியே காய்கறி வாங்குவோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

3 முதல் 5 வினாடிகள்
இந்த மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைக்கழுவ வைக்கிறார்கள். பின்னர் ஒரு கிருமி நாசினி சுரங்கம் எனும் பாதை வழியாக மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வழி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன. இந்த வழியை கடக்க 3 முதல் 5 வினாடிகள் ஆகும். இதை திருப்பூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.
|
நெட்டிசன்கள்
தமிழகத்தில் வேறெங்கும் கடைப்பிடிக்கப்படாத இந்த முயற்சியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொண்டு வந்துள்ளார். இது மாதிரியான புது முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது போல் அனைத்து மாவட்டங்களிலும் சுத்தத்தை கடைப்பிடித்தால் கொரோனாவை எளிதாக ஒழிக்கலாம் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications