திருப்பூரில் சேட்டிலைட் போன்.. தீவிரவாதிகள் ஊடுருவலா என அச்சம்.. போலீஸ் விசாரணை
திருப்பூர்: திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளதால் உளவுத் துறை போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பனியன் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற நகரமான திருப்பூரில் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழிலாளர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியா மற்றும் வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 4 பயங்கரவாதிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நாடு முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு கருதி இந்தியாவில் சேட்டிலைட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி இரவு ராமநாதபுரம் உச்சிபுளியில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் சாட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சிக்னல் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிக்னல் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே ஆதியூரில் இருந்து வந்ததை அறிந்தனர். இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி சேட்டிலைட் போனை பயன்படுத்தியது யார்? எந்த நாட்டில் உள்ளவர்களிடம் பேசப்படுகிறது? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பயங்கரவாதிகள் யாரேனும் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications