Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயிலான நானே ஐஏஎஸ் ஆயிட்டேன்! குறைந்த மார்க்கால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு கலெக்டர் ஊக்கம்! செம

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ‛‛நானே 10ம் வகுப்பு பெயில் ஆகி தான் கலெக்டராகி உள்ளேன். உன்னால் முடியாதா?'' என 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற மாணவனை எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் சந்தித்த திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஊக்கமளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்து ராஜ் உள்ளார். இவர் அடிக்கடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவது இல்லை என்ற புகார் எழுந்தது.

Tiruppur Collector Christuraj encouraged the student who tried to commit suicide after getting low marks in 10th standard

மேலும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மருத்துவுமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவும் அவருக்கு புகார்கள் சென்றனர். இந்நிலையில் தான் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த வேளையில் அங்குள்ள நோயாளிகளை சந்தித்து சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இந்த வேளையில் தான் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மாணவனை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேசினார்.

அப்போது கலெக்டர் கிறிஸ்து ராஜ், ‛‛20ம் வகுப்பில் பெயில் ஆன பிறகு மீண்டும் தேர்வு எழுதி படித்த நான் கலெக்டராகி விட்டேன். உன்னால் முடியாதா? இப்போது தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும். மேலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். தொடர்ந்து நன்றாக படி. பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு செல்போனில் அழைத்து கண்டிப்பாக கூற வேண்டும்'' என ஊக்கப்படுத்தினார்.

அதோடு, ‛‛நானும் உனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். விளையாட்டில் ஆர்வம் இருந்தால் நன்றாக விளையாடு. எதை பற்றியும் கவலை படாதே. உறுதியோடு நல்ல முறையில் படிக்க வேண்டும். தோல்வி என்பது முடிவு அல்ல. தோல்வி தான் வெற்றிக்கான அடுத்த படிக்கட்டு'' என அறிவுரை வழங்கினார்.

இதனை கேட்ட மாணவனும் நிச்சயம் நன்றாக படிப்பதாக தெரிவித்தான். மேலும் மாணவனின் குடும்பத்தினர் கலெக்டரின் ஊக்கத்துக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+