பெயிலான நானே ஐஏஎஸ் ஆயிட்டேன்! குறைந்த மார்க்கால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு கலெக்டர் ஊக்கம்! செம
திருப்பூர்: ‛‛நானே 10ம் வகுப்பு பெயில் ஆகி தான் கலெக்டராகி உள்ளேன். உன்னால் முடியாதா?'' என 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற மாணவனை எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் சந்தித்த திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஊக்கமளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்து ராஜ் உள்ளார். இவர் அடிக்கடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவது இல்லை என்ற புகார் எழுந்தது.

மேலும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மருத்துவுமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவும் அவருக்கு புகார்கள் சென்றனர். இந்நிலையில் தான் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த வேளையில் அங்குள்ள நோயாளிகளை சந்தித்து சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இந்த வேளையில் தான் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மாணவனை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேசினார்.
அப்போது கலெக்டர் கிறிஸ்து ராஜ், ‛‛20ம் வகுப்பில் பெயில் ஆன பிறகு மீண்டும் தேர்வு எழுதி படித்த நான் கலெக்டராகி விட்டேன். உன்னால் முடியாதா? இப்போது தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும். மேலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். தொடர்ந்து நன்றாக படி. பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு செல்போனில் அழைத்து கண்டிப்பாக கூற வேண்டும்'' என ஊக்கப்படுத்தினார்.
அதோடு, ‛‛நானும் உனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். விளையாட்டில் ஆர்வம் இருந்தால் நன்றாக விளையாடு. எதை பற்றியும் கவலை படாதே. உறுதியோடு நல்ல முறையில் படிக்க வேண்டும். தோல்வி என்பது முடிவு அல்ல. தோல்வி தான் வெற்றிக்கான அடுத்த படிக்கட்டு'' என அறிவுரை வழங்கினார்.
இதனை கேட்ட மாணவனும் நிச்சயம் நன்றாக படிப்பதாக தெரிவித்தான். மேலும் மாணவனின் குடும்பத்தினர் கலெக்டரின் ஊக்கத்துக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications