திருப்பூரில் ஒரே திகைப்பு.. கோபாலகிருஷ்ணன் கலெக்டர் ஆபீசில் டக்குனு இப்படியா பண்றது? ஆடிப்போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த முடிவை கண்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகமே திணறி போய்விட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. கோபாலகிருஷ்ணன் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன நடந்தது?

நம்முடைய தமிழகத்தில், இளைய தலைமுறையினரிடம் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் பணத்தை இழந்த எத்தனையோ பேர், பரிதாபமாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

Tiruppur Collector Office Gopalakrishnan

அதனால்தான், ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இணைய விளையாட்டுத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பதிவு செய்வதற்கும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இணையத்தில் பணம் கட்டி விளையாடுவதற்கும் ஆணையம் தடை விதித்திருக்கிறது.

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரை ஆன்லைன் விளையாட்டுகளில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஒருவர் ஆன்லைன் விளையாட்டில், வாரத்திற்கு, மாதத்திற்கு எவ்வளவு பணம் செலவிடுகிறார் என்ற விவரத்தை அவருக்கு இணைய விளையாட்டு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும்" என்றெல்லாம் உத்தரவிட்டுள்ளார்.

இதுஒருபுறமிருந்தாலும், திருப்பூரில் ஒருவர் சோக முடிவை எடுக்க துணிந்துவிட்டார்.. திருப்பூர், காந்தி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு 45 வயதாகிறது.. மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி 2 பேருமே அருகிலுள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

அதிர்ச்சியும், ஏமாற்றமும், வேதனையும்

ஆனால், கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு போவது கிடையாதும்.. எப்ப பார்த்தாலும், கிளப்களுக்கு சென்று சீட்டு விளையாடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்..

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, ஊத்துக்குளி அருகே உள்ள ஒரு கிளப்பில் சீட்டு விளையாடி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துவிட்டார்.. இந்த ஏமாற்றத்தை கோபாலகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. விரக்தியும், அதிருப்தியும் அடைந்த கோபால கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.


மாவட்ட கலெக்டர் அலுவலகம்

இதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடம்பில் ஊற்றி, தீக்குளிக்க போனார்.. இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார், பெட்ரோல் கேனை பறித்துவிட்டு, கோபாலகிருஷ்ணன் மீது தண்ணீர் ஊற்றினார்கள்.. பிறகு அவரிடம் விசாரித்தபோது, தன்னைப்போல் யாரும் சீட்டு விளையாடி பணத்தை இழந்துவிடக்கூடாது என எச்சரிப்பதற்காகவே தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் சொன்னார்.

பிறகு, போலீசார் கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+