திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காதலன் வீட்டில் 3 நாள் தங்கிய காதலி.. திடீரென தூக்கில் தொங்கினார்.. பல்லடத்தில் பரபரப்பு

காதல் விவகாரத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Google Oneindia Tamil News

பல்லடம்: பெற்றோரை ஏமாற்றிவிட்டு காதலன் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணின் வாழ்வு மிகவும் மோசமாக முடிந்திருக்கிறது.

வால்பாறையை சேர்ந்தவர் மஞ்சுளா. திருப்பூரில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். உடன் வேலை பார்த்து வந்த கார்த்தி மீது மஞ்சுளாவுக்கு லவ் வந்துவிட்டது.

கார்த்தியும் மஞ்சுளாவை விரும்ப, ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமாக காதலித்தார்கள். இந்த லவ் மேட்டர் மஞ்சுளா வீட்டுக்கு தெரிந்துள்ளது. இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

காதலன் வீடு

காதலன் வீடு

இந்நிலையில், தனது அம்மா வசந்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு மஞ்சுளா ஊருக்கு கிளம்பி போனார். அம்மாவையும் நேரில் பார்த்து விசாரித்தார். பிறகு வேலைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கு போகாமல், நேராக திருப்பூரில் உள்ள கார்த்தி வீட்டுக்கு மஞ்சுளா வந்திருக்கிறார்.

தூக்கில் தொங்கினார்

தூக்கில் தொங்கினார்

3 நாட்கள் கார்த்தி வீட்டில்தான் மஞ்சுளா தங்கியிருந்து இருக்கிறார். இந்நிலையில், மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மரணத்தில் மர்மம்

மரணத்தில் மர்மம்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக உடனடியாக மஞ்சுளா பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மஞ்சுளாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தார்கள்.

தடயங்கள் இல்லை

தடயங்கள் இல்லை

இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மஞ்சுளா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என இதுவரை தெரியவில்லை. மற்றொரு புறம், மஞ்சுளா தூக்கில் தொங்கியதற்கான தடயங்களும் இல்லை. எனவே காதலன் கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர் மறுப்பு

பெற்றோர் மறுப்பு

இதனிடையே மஞ்சுளா என்ற பெண் தங்கள் வீட்டில் தங்கி இருந்ததே தங்களுக்கு தெரியாது என்று கார்த்திக்கின் பெற்றோர் சொன்னதை கேட்டு போலீசாருக்கு இன்னும் தலையே சுற்றிவிட்டது. அதனால் 3 நாட்கள் மஞ்சுளா கார்த்தி வீட்டில் தங்கியிருக்க காரணம் என்ன? அங்கு என்ன நடந்தது? எதற்காக இந்த தற்கொலை? என்பது உட்பட பல்வேறு விஷயங்களில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

English summary
Young Girl sucide near Tirupur due to love issue. Police have arrested the boyfriend and are investigating his family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X