ஆறு வயது மாமன்மகளிடம் விபரீதமாக விளையாடிய அத்தை மகன்கள் கைது
திருச்சி அருகே மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி: ஆறு வயது மாமன் மகளுடன் ஒடிப்பிடித்து விளையாடாமல் விபரீதமாக விளையாடிய அத்தை மகன்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருச்சியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கோடை விடுமுறையில் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் திருச்சி ஜீயபுரம் அருகே தாயனூர் கீழக்காட்டில் உள்ள மாமா வீட்டிற்கு இரண்டு சிறுவர்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர். மாமனுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுடன் விளையாடிக்கொண்டு பொழுதை போக்கியுள்ளனர்.

அத்தையும், மாமாவும் வேலைக்காக வெளியில் சென்ற நேரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். விளையாட்டு போக்கில் சிறுமி அதனை தெரிவிக்கவில்லை.
குளிக்க வைக்கும் போது சிறுமியின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்துள்ளது. உறுப்பில் ரத்தப்போகும் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அம்மா, என்ன நடந்தது என்று விசாரித்தார்.
அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே அத்தை மகன்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை கூறினார். சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குபதிவு செய்து இரண்டு சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மைனர் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அக்கம் பக்கத்து வீட்டினர்களால் பாலியல் தொல்லை ஏற்படுவது ஒருபுறம் இருக்க சொந்தக்காரர்களால் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. யாரையும் நம்பி வீட்டிற்குள் விடவே பயமாக இருக்கிறது என்பது பெண் குழந்தையை பெற்றவர்களின் வேதனையாக இருக்கிறது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications