ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கு.. 4 பேர் லால்குடி நீதிமன்றத்தில் சரண்
திருச்சி: ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கில் 4 போ் லால்குடி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தனா்.
ராமநாதபுரம் கள்ளா் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (22). தனது நண்பா் யோகேஸ்வரனுடன் கடை வீதியில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாா்.
அப்போது மூன்று பைக்குகளில் வந்த 9 போ் அருண்பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றனா். அருகிலிருந்த நண்பா் யோகேஸ்வரனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தனிப்படை மூலம் தேடி வந்தனா்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த ஷேக் அப்துல் ரகுமான் (20), சதாம் உசேன் (21), காசிம் ரஹ்மான்(20), முகமது அஜீஸ் (20) ஆகிய நால்வரும் திருச்சி மாவட்டம், லால்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் புதன்கிழமை மாலை சரணடைந்தனா்.
சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் தற்கொலை.. இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்!
இதைத் தொடா்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் அவா்கள் 4 பேரும் மணப்பாறை சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில் இந்த கொலைக்கு பலர் மதச்சாயம் பூசத் தொடங்கிவிட்டார்கள். இந்த கொலை கோஷ்டி மோதலால் நடந்தது என ராமநாதபுரம் காவல் துறை ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.