சூரியூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளை.. வாடிவாசலில் நிகழ்ந்த அந்த சம்பவம்.. என்ன நடந்தது?
திருச்சி: சூரியூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியில் வந்த காளையும், களத்தில் இருந்து திடீரென வாடிவாசலுக்குள் புகுந்த காளையும் நேருக்கு நேர் மோதியதில் திருவளர்சோலையைச் சேர்ந்த காளை உயிரிழந்தது.
மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேடு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் சூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியில் பங்கேற்கும்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். இன்று காலை 8 மணிக்கு சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. இதில் மொத்தமாக 800 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். காலை முதலே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறி பாய்ந்த போது, அதனை அடக்க மாடுபிடி வீரர்களும் பாய்ந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் பங்கேற்று பரிசை வென்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அதற்கேற்ப ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இந்த நிலையில் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவளர்சோலையைச் சேர்ந்த அப்பு என்பவரின் காளை வாடிவாசலில் இருந்து வெளியில் வந்துள்ளது. அந்த நேரத்தில் களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் புகுந்த காளையும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அப்புவின் காளை காயமடைந்த நிலையில், உடனடியாக அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி காயமடைந்த அந்த காளை சில மணி நேரங்களில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் காளையின் உரிமையாளர் மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 22 வயதான இளைஞரான நவீன் குமார் உயிரிழந்த நிலையில், இன்று காளை உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications