Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகத்திற்கு வந்த உணவுப் பொருட்கள்.. பொதுமக்கள் ஷாக்! அதிமுக ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : துறையூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு நகராட்சி குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துறையூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. துறையூர் பகுதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் மூன்று வேளையும் பசியாறுவதற்காக அதிமுக ஆட்சியில் இந்த உணவகம் திறக்கப்பட்டது.

 admk condemns rice bags for Amma unavagam were carried in garbage truck

தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் இந்த அம்மா உணவகத்தில் பசியாறி வருகின்றனர். 12 பணியாளர்கள் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். உணவு சமைப்பதற்காக துறையூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு இங்கு சமைத்து பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக துறையூர் அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரிசி மூட்டைகளை துறையூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து அம்மா உணவகத்தில் இறக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி குப்பை அள்ளுவதற்கான வண்டியில் அரிசி மூட்டைகள் வந்து அம்மா உணவகத்தில் இறங்கியுள்ளன. அதனை கண்ட பேருந்துக்காக வெளியூர் செல்ல காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவு தயாரிக்கப்படும் அரிசியை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் குப்பை வாங்க பயன்படுத்தும் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கியது பலரையும் முகம் சுளிக்கச் செய்தது.

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தால் ஏராளமானோர் பயன் பெற்று வந்த நிலையில் தற்போது அம்மா உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்க அரிசி மூட்டைகள் குப்பை வண்டியில் வந்து இறக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் தீயாகப் பரவி, பொதுமக்களின் கண்டனங்களைச் சந்தித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள துறையூர் நகராட்சி நிர்வாகம், வழக்கமாக அரிசி மூட்டைகள் ஏற்றி வரும் வாகனம் பழுதடைந்ததால் நகராட்சியில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அரிசி முட்டைகள் அனுப்பப்பட்டன. அந்த வாகனம் அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குப்பை சேகரிக்க பயன்படுத்துவதில்லை. எனினும் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

துறையூர் நகராட்சியின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர்களுக்கு என்னமோ தங்கத் தட்டும், ஜப்பான் பயணமும், அம்மா உணவகம் - ஏழைகளின் பசிக்கு குப்பை வண்டியா? எளியவர்கள் மீதும், ஏழைகளின் மீதும் அக்கறையற்ற இந்த அரசு விரைவில் அகலும்!" என விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+