ஸ்ரீரங்கம், திருச்சியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுக அமைச்சர்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் மேக்குடி ஊராட்சிமற்றும் குமாரவயலூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2800 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை அமைச்சர் வளர்மதி வழங்கினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை படி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் மேக்குடி ஊராட்சியில் செங்குறிச்சி, மேக்குடி, நடுப்பட்டி, ஆலம்பட்டி, குமாரவயலூர் ஊராட்சி முருகன் கோயில், பாரதிநகர், கொத்தட்டை, குறுஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 2800 குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.வளர்மதி நேற்று தனது சொந்த நிதியில் இருந்து தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினார்.

அதேபோல் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய வரகநெரி முதல் பால்பண்ணை வரை உள்ள சாலையை புனரமைக்க பணியை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து தரமான முறையில் சாலை பணிகளை நடைபெறுகிறாதா என்பதை ஆய்வு செய்தார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் 500 பேருக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண தொகுப்பு உதவிகளை வழங்கினார்.

இதில்திருச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. சி.பரமசிவம், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் எம்.ஏ. அன்பழகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் சுரேஷ் குப்தா, வெல்லமண்டி என் ஜவஹர்லால் நேரு வட்ட செயலாளர்கள் அரப்ஷா, கே.டி. தங்கராஜ், கே சி பி ஆனந்த், முத்துக்குமார் சத்திரப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் நவலூர் குட்டப்பட்டு செல்வம், மேக்குடி முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் தமிழ்செல்வன், சோமரசம்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் பொன்.செல்வராஜ், வீரமுத்து, முத்தையன், வீரமணி, எட்டரை குணா, வைரவேல் மேலும் கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications