Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரேயொரு போட்டோ தான்! அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு வந்த சிக்கல்! போலீசில் ‛பேராயர்’ பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‛என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்நிலையில் விளம்பரம் தேடும் வகையில் தனது போட்டோவை அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேராயர் சந்திரசேகரன் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

 Annamalai padayatra: Archbishop Chandrasekaran filed a police complaint against BJP its using photo without permission

மேலும் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலும், மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

"என் மண், என் மக்கள்'' என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். 6 மாதங்கள் வரை இந்த பாதயாத்திரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இந்நிலையில் இன்று அண்ணாமலையில் பாதயாத்திரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் நடந்தது. திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த பாதயாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்.

 Annamalai padayatra: Archbishop Chandrasekaran filed a police complaint against BJP its using photo without permission

இத்தகைய சூழலில் தான் அண்ணாமலையில் பாதயாத்திரை தொடர்பாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பேராயர் ஒருவரின் போட்டோவை எவ்வித அனுமதியும் இன்றி பயன்படுத்திய நிலையில் தற்போது பிரச்சனை உருவாகி உள்ளதோடு, போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயராக இருப்பவர் சந்திரசேகரன். இந்நிலையில் தான் அண்ணாமலையின் ‛என் மண், என் மக்கள்' பாதயாத்திரைக்கு ஆதரவு அளிக்கும்படி அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பேராயர் சந்திரசேகரனை சந்தித்து பாஜகவின் சிறுபான்மை அணியின் துணை தலைவர் ஏ ஆர் பாட்ஷா முன்வைத்தார்.

அப்போது அவர்கள் வழங்கய நோட்டீசில் பேராயர் சந்திரசேகரனின் போட்டோ இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த சந்திரசேகரன் நோட்டீசில் இருக்கும் எனது போட்டோவை அகற்றும்படி கூறினார். இதுதொடர்பாக சந்திரசேகரன் கூறுகையில், ‛‛என்னுடைய அலுவலகத்தில் 4 முதல் 5 பேர் வந்து பாஜக சார்பில் நடக்கும் நடைப்பயணத்துக்கு அழைப்பு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். அதுபற்றிய விளம்பரத்தை என்னிடம் கொடுத்தனர். அதில் எனது புகைப்படம் இருந்தது.

இதையடுத்து எனது புகைப்படத்தை ஏன் இடம்பெற செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினேன். மேலும் என்னுடைய சம்மதம் இல்லாமல் போட்டோவை இடம்பெற செய்வது தவறு. இது சட்டப்படி குற்றம் என்பது தெரியதா? என கேட்டேன். இதையடுத்து தெரியாமல் செய்துவிட்டதாக கூறினார்கள்'' என்றார்.

இதற்கிடையே அண்ணாமலையின் ‛என் மண், என் மக்கள்' பாதயாத்திரை தொடர்பான போஸ்டரில் பேராயர் சந்திரசேகரனின் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து மறுப்பு அறிக்கை வெளியிட்ட சந்திரசேகரன், பாஜகவினர் மீது உறையூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+