நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து... கோவையில் பாஜக பிரமுகர் கைது.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருச்சி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவின் கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
உதகை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பாஜக பிரமுகர் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதேபோல திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை பாஜக சார்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் கல்யாணராமன் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர், அதைத்தொடர்ந்து அங்கு வந்த மேலும் சில எஸ்டிபிஐ நிர்வாகிகள் பாஜக கூட்டத்தில் கற்களை எறிந்தனர். நிலைமை மோசமாவதைத் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி, அங்கிருந்தவர்களைக் கலைத்தனர். மேலும், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 30 பேரையும் கைது செய்தனர்.

மேலும், நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய கல்யாணராமனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினர்.

நேற்றிரவு. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மீது கலவரம் ஏற்படுத்த முயற்சி, வெறுப்புப் பேச்சு உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications