கேரள, கர்நாடக வெள்ளத்தைப் பார்வையிட்டாரே பிரதமர். தமிழகத்திற்கு வராதது ஏன்.. வேல்முருகன் கேள்வி
தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: கேரளா, கர்நாடகா வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர், வர்தா, கஜா புயல் பாதிப்பை பார்வையிட வராதது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் சேதமாகி விட்டிருக்கிறது. இதனால் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புயலால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்க முன்வந்தார்.
அதன்படி, கடந்த 21-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை என 3 நாட்கள் அந்த பகுதிகளில் தங்கியிருந்து 2 கோடி ரூபாய்க்கும் மேல் நிவாரண உதவிகளை செய்தார்.

கடும் விமர்சனம்
தற்போது மீண்டும் திருச்சி மாவட்டத்தை பார்வையிட சென்றிருக்கிறார். அங்கே மணப்பாறை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் செய்தியாளர்களை வேல்முருகன் சந்தித்தார். அப்போது மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளா, ஆந்திரா
"டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. ஆகவே கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும். இது போன்ற புயலால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் எல்லாம் உடனடியாக சென்று நேரில் பார்வையிட்டார்கள்.

யாரும் வரவில்லை
உடனடியாக அந்த புயல் சேதத்துக்கு மத்திய அரசு நிதியையும் அளித்தார்கள். ஆனால் தமிழகத்தில் வர்தா, கஜா இப்படி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை பிரதமர் உள்ளிட்ட யாரும் பார்வையிட வரவில்லை. மத்திய குழு மட்டும் வந்துள்ளது.

வஞ்சிக்கிறது
அந்த குழுவினரும் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பார்த்து விட்டு செல்கின்றனர். இப்படியாக தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது." இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications