அதிமுக “பாலிசி”.. தயாநிதிமாறன் பேச்சால் ஒரே சிரிப்பு! ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தோல்வியாமே
திருச்சி: ஒரே நாடு, ஒரே தோ்தல் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவில் தென்னிந்தியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியை திமுக எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகரச் செயலா் மு மதிவாணன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா்கள் ஏ.ஜே. சாலமன், கே. லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
லீக் முறையில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2 ஆம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2 வது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சா்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், "ஒரே நாடு- ஒரே தோ்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தென்னிந்தியாவை சோ்ந்த எந்த எம்பிக்களும் இடம்பெறவில்லை. அதேபோல, தோ்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் இல்லை.
முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதியை குழுவின் தலைவராக நியமித்துள்ளாா்கள். அது ஏன் எனத் தெரியவில்லை. நரேந்திர மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினா் தான் இருக்கிறாா்கள். ஆனால், இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணி. அதில் மக்களுக்கான தலைவா்கள் உள்ளனா்.
மக்களவைத் தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சி தோ்தல் ஆகிய மூன்றிலும் அடுத்தடுத்து தோல்வி கிடைப்பதால் அத்தோ்தல்களில் ஒரே முறை தோல்வியடைந்து விடலாம் என்பதற்கே ஒரே நாடு- ஒரே தோ்தலை அதிமுக தற்போது ஆதரிக்கிறது. சிஏஜி அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஊழலை மூடி மறைக்கப் பாா்க்கிறாா்கள்.
அதேபோல அதானி விவகாரம், பெரு நிறுவனங்களின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் திசைதிருப்ப தேவையற்ற சா்ச்சைகளை உருவாக்குவதுதான் பிரதமா் மோடியின் வேலை. 2024 இல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நீட் தோ்வுக்கு விலக்கு கொண்டு வருவோம்." என்று அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications