Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மனை பார்க்க போனால் ஆஸ்பத்திரிக்கு தான் போகனுமோ? சமயபுரத்தில் ’லொள் லொள்’ தொல்லை! பதறும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர் பக்தர்கள். இதனால் தரிசனத்துக்கு செல்லும் போது கூட பயத்துடனே செல்ல வேண்டிய நிலை இருப்பதாக புலம்புகின்றனர்.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சி காவிரி கரை ஓரமாக உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர்.

Trichy Samayapuram Mariamman Temple

மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தொடும். மேலும் குழந்தைகளின் உடல் நலன், குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் மாசி மாதத்தின் காரணமாக அதிகப்படியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை பயன்படுத்தியும் வெளி மாநில சபரிமலை பக்தர்களை குறி வைத்தும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Trichy Samayapuram Mariamman Temple

சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபம் மற்றும் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் தான் இவர்களது குறி. சுவாமி தரிசனத்திற்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் என பேரம் பேசி தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது,

மேலும் இடைத்தரகர்களுக்கு கோவில் காவலர்கள், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தரிசனத்திற்காக பக்தர்கள் செல்லும் வரிசை பாதையில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.

Trichy Samayapuram Mariamman Temple

தற்போது அனைத்து நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் அன்னதான மண்டபத்தின் அருகே இருந்து பக்தர்கள் தனி வழியில் சுவாமி தரிசனம் செய்ய அனுப்பப்படுகின்றனர். திருப்பதியைப் போல தடுப்புகள் அமைத்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக மண்டபங்கள் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு நிழல் பகுதியில் அவர்கள் வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் நாய்கள் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. வெயில் காரணமாக நாய்கள் அனைத்தும் பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் ஆங்காங்கே தூங்கி வருகின்றன. சில நேரங்களில் அவற்றுக்குள்ளாக சண்டை வந்து பக்தர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

Trichy Samayapuram Mariamman Temple

ஆனால் கோவிலை தவிர பிற பகுதிகளில் முற்றிலுமாக காவலாளிகள் இல்லாததால் பக்தர்கள் நாய்க்கடி தொல்லையால் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு மட்டும் காவலாளிகள் 'சிறப்பு கவனிப்பு' தரும் நிலையில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நாய்கள் பயத்துடனே செல்லும் நிலை உள்ளது.

அம்மனை பார்க்க சென்றால் ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலைமை இருப்பதாகவும் புலம்புகின்றனர். எனவே கோவிலின் அனைத்து பகுதிகளிலும் காவலாளிகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும், கோவில் வளாகத்தில் சுற்றி தெரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+