“நேருவுக்கு ஸ்கெட்ச்? இதுதான் BJP! நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை!” சத்தியப்பிரமாணம் செய்த கே.என்.நேரு
திருச்சி: "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு நேருவை அடித்தால், இந்தப் பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று, அமைச்சர் கே.என்.நேரு பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. அமலாக்கத்துறை ஆதாரங்களோடு கடிதம் எழுதியும் கூட, அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்று பாஜக தலைவர்கள், கே.என்.நேருவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.

இப்படி இருக்கையில், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை" என நேரு கூறியிருக்கிறார். திருச்சியில் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று நேரு பேசியதாவது, "என் மீது மத்திய அரசு வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றியடைந்துவிட்டோம். ஆனாலும், இந்த விவகாரங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இந்த விவகாரங்கள் நீதிமன்றத்தில் இருப்பதால் வெளிப்படையாக பேச முடியாது. இருப்பினும் உங்களிடம் சொல்கிறேன்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு நேருவை அடித்தால், இந்தப் பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் நிச்சயமாக எந்த தவறும் செய்ய மாட்டேன். இதற்கு முன்னரும் எந்த தவறும் செய்ததில்லை என்கிற உறுதியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த குற்றச்சாட்டு குறித்து எல்லா விவரங்களையும் உங்களிடம் சொல்ல முடியும். ஆனால், வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் நான் எதையும் சொல்லவில்லை. நான் 5 முறை தேர்தலில் நின்றிருந்தேன். அதில் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். தோல்வி அடைந்த போதும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தேன். எனவே தொகுதி மக்கள் எப்போதும் போல கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications