திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம்.. திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

திருச்சி: இன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி பூகம்ப ஆய்வாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

திருச்சியை சேர்ந்தவர் பிரகாஷ். இயற்பியல் பட்டதாரியான இவர் பல ஆண்டுகளாக பூகம்பங்களும், அதனால் ஏற்படும் தொடர் மழை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதை தவிர, அமெரிக்காவின் நாசா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய பூகம்பவியல் ஆய்வு மையங்களுக்கு அவ்வப்போது மழை எச்சரிக்கை மற்றும் அதை தொடர்ந்து ஏற்படவுள்ள பூகம்பங்கள் குறித்த ஆய்வுகளை அனுப்பி வருகிறார்.

ஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை ஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை

பிரகாஷ்

பிரகாஷ்

இந்நிலையில் ஃபனி புயல் உருவான நிகோபார் தீவு பகுதிக்கு அருகில் வடக்கு அந்தமான் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கான வாய்ப்புகள் உருவாகி கொண்டிருப்பதாக பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

அதில், வடக்கு அந்தமான் பகுதியில் அதே போன்ற ஒரு புவியியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் பகுதியில் இன்னும் 2 வாரங்களில் 5.5 முதல் 6 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்.

பூகம்பங்கள்

பூகம்பங்கள்

ஏற்கனவே அந்தமான் தீவுப்பகுதியில் கண்டத்தட்டுகள் நகர்வு அதிகம் நிகழ்வதால் அந்த பகுதியில் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகிறது. இப்போது ஃபனி புயல் உருவானது. இந்த ஃபனி புயல் 4-ம் வகையை சேர்ந்தது. இது அதிக அழிவை ஏற்படுத்தும். இதைத்தொடர்ந்து ஏற்படவுள்ள பூகம்பங்கள், அதிக சக்தி வாய்ந்ததாகவும், அதிக அழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்.

மேகக்கூட்டங்கள்

மேகக்கூட்டங்கள்

கடலுக்கு அடியில் கண்டத்தட்டுகள் உரசுவதால் உருவாகும் வெப்பம், கோடிக்கணக்கான கியூபிக் மீட்டர் கடல் நீரை நீராவியாக்குகிறது. இதனால் திரண்டெழுந்து நகரும் மேகக்கூட்டங்கள் மிகப்பெரிய அளவிலான புயலாக மாறி சேதத்தை உருவாக்கி விடுகின்றன என்பது புவியியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட நிகழ்வு.

பூகம்பங்கள்

பூகம்பங்கள்

எனவே கடல் பகுதியில் பூகம்பங்கள் நிகழும்போது மிகப்பெரிய முன்னெச்சரிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

English summary
Trichy earthquake analyst warns Earthquake likely in Andaman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X