Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டு நடப்பு பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது! திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நாட்டு நடப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை நாட்டு மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றி மட்டுமே கவலைப்படுவதாக விமர்சித்தார்.

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர் இதனைக் கூறினார்.

சொத்து வரி

சொத்து வரி

சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சென்று தமிழக அரசு மீதான தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சொத்து வரி உயர்வால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வசித்து வந்த வாடகை வீட்டுத்தாரர்கள் இனி மாதம் ரூ.2,500 வாடகை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் விரோதம்

மக்கள் விரோதம்

திமுக அரசை பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வரியே உயர்த்தாத அரசு அம்மாவின் அரசு எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரியை இந்தளவுக்கு உயர்த்துங்கள் என எந்த இடத்திலும் மத்திய அரசு கூறவில்லை என்றும் மத்திய அரசு மீது பழியை சுமத்தி திமுக அரசு தப்பிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

நிர்வாக திறனில்லை

நிர்வாக திறனில்லை

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறனில்லை என்றும் திமுக தேர்தல் அறிக்கை 487 வது வரிசையில் சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என கூறிவிட்டு இப்போது அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என திமுக அரசு நினைப்பதாகவும் சொத்துவரி உயர்வை திரும்பபெற வேண்டும் எனவும் அவர் பேசினார்.

அதிமுக ஆட்சியில்

அதிமுக ஆட்சியில்

தாலிக்கு தங்கம் உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அவற்றையெல்லாம் திமுக அரசு கைவிட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை மளமளவென உயர்ந்திருப்பதாகவும் இன்று நடுத்தர வர்க்கத்தினரால் வீடு கட்ட முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+