நாட்டு நடப்பு பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது! திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திருச்சி: நாட்டு நடப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை நாட்டு மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றி மட்டுமே கவலைப்படுவதாக விமர்சித்தார்.
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர் இதனைக் கூறினார்.

சொத்து வரி
சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சென்று தமிழக அரசு மீதான தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சொத்து வரி உயர்வால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வசித்து வந்த வாடகை வீட்டுத்தாரர்கள் இனி மாதம் ரூ.2,500 வாடகை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் விரோதம்
திமுக அரசை பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வரியே உயர்த்தாத அரசு அம்மாவின் அரசு எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரியை இந்தளவுக்கு உயர்த்துங்கள் என எந்த இடத்திலும் மத்திய அரசு கூறவில்லை என்றும் மத்திய அரசு மீது பழியை சுமத்தி திமுக அரசு தப்பிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

நிர்வாக திறனில்லை
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறனில்லை என்றும் திமுக தேர்தல் அறிக்கை 487 வது வரிசையில் சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என கூறிவிட்டு இப்போது அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என திமுக அரசு நினைப்பதாகவும் சொத்துவரி உயர்வை திரும்பபெற வேண்டும் எனவும் அவர் பேசினார்.

அதிமுக ஆட்சியில்
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அவற்றையெல்லாம் திமுக அரசு கைவிட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை மளமளவென உயர்ந்திருப்பதாகவும் இன்று நடுத்தர வர்க்கத்தினரால் வீடு கட்ட முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications