டேக்கா கொடுத்து எஸ்கேப் ஆன.. திருவாரூர் திருடன் முருகன்.. பெங்களூர் கோர்ட்டில் சரண்!
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையின் முக்கிய நபர் முருகன் கைது செய்யப்பட்டார்
Recommended Video
திருச்சி: லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மாஸ்டர் பிளான் போட்டு, இந்த கொள்ளைக்கே மூல காரணமாக இருந்த கேங் லீடர் முருகன் பெங்களூர் கோர்ட்டில் இன்று சரணடைந்துள்ளான்.
லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மிகப்பெரிய நெட் ஒர்க் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே நம் போலீசார் சந்தேகித்து வந்தனர். அதன்படியே இந்த கொள்ளையை நடத்தியது நாடு முழுக்க கைவரிசையை காட்டிய முருகன் என்பவனாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.
கடந்த வாரம் பைக்கில் சிக்கிய மணிகண்டன், மற்றும் சுரேஷ்.. இவர்களை போலீசார் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில்தான், லலிதா ஜூவல்லரி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் முடிவு செய்தனர்.

ஏடிஎம் கொள்ளையன்
முருகன் லேசுபட்ட ஆள் இல்லை. தாஹி அலி தலைமையில் டெல்லியில் பல குற்ற செயல்களிலும் முருகன் ஈடுபட்டவன், பெங்களூரில் கொள்ளை, ஹைதராபாத்தில் கொள்ளை என ஒவ்வொரு மாநிலத்திலும் கை வரிசையை காட்டியவன்.

கூட்டாளி
மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் பறிப்பவதில் முருகன் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்கள். 200 கைது வாரண்ட்கள் வரை நிலுவையில் உள்ளதாம். நெல்லையில் தினகரன் என்ற ஒரு கூட்டாளி உள்ளானாம். இவனுடன் மட்டும் சேர்ந்து முருகன் 800 கொள்ளைகளை நடத்தி உள்ளான்.

நம்பிக்கை
2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கைவரிசையை காட்டிய இந்த திருவாரூர் திருடன் முருகன் சிக்கினால், பல திடுக் தகவல்கள் வெளியாகும் என்பதால், முருகனை பிடிக்க போலீசார் ஆரம்பம் முதலே தயாரானார்கள். முருகன் எப்போதுமே வேனிலேயே சுற்றி திரிபவர் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளதால், அதற்கான வேலைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

கைது
கொள்ளையடிக்க திருச்சியில் ஒரு வீட்டையே வாடகைக்கு பிடித்து, 2 மாசம் ஸ்கெட்ச் போட்டுள்ள தகவலும் வெளியானது. இதனால் போலீசாரின் முழு கவனமும் முருகனை பிடிப்பதிலேயே இருந்தது. கொள்ளையடித்த 8 கிலோ நகையுடன் தப்பிய முருகனுக்கு மிகப்பெரிய தேடுதல் வலை வீசப்பட்டது. இப்போது பெங்களூர் கோர்ட்டில் முருகன் சரணடைந்துள்ளான். இதையடுத்து, போலீசாரின் விசாரணை முருகனிடம் தீவிரமடையும் என தெரிகிறது.

தவிர்ப்பு
பெங்களூரு பானஸ்வாடி பகுதியில், நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு முருகன் மீது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில்தான் முருகன் சரணடைந்துள்ளான். தமிழக போலீஸாரிடம் நேரடியாக சிக்குவதைத் தவிர்க்கவே பெங்களூர் கோர்ட்டில் அவன் சரணடைந்திருப்பதாக தெரிகிறது.

விசாரணை
லலிதா ஜுவல்லரி சுவரில் ஓட்டை போட்டது முதல், இந்த கொள்ளைக்கு உதவியர்கள் யார்யார், இந்த கொள்ளை தவிர பிற கொள்ளைகளில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசாரின் விசாரணை ஆரம்பமாகும் என்று தெரிகிறது. இதன்மூலம் பல ரகசிய பகீர்களும் முருகனிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications