அடுத்த 24 மணி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் ரெய்டாம்.. காதில் விழுந்ததாக எச்.ராஜா தகவல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அடுத்த அமலாக்கத் துறை ரெய்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடக்க வாய்ப்பிருக்கிறது என பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு துணை போவதாக குற்றம்சாட்டிய எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் செந்தில் பாலாஜி வழக்கை பொறுத்தவரை மாநில அரசு 60 நாட்களில் இந்த வழக்கை விசாரணை செய்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

H.Raja says that ED may raid at Udhayanidhi stalin house

கோடிக்கணக்கில் கிராவல்களை எடுத்து விற்றதாக அமைச்சர் பொன்முடி மீது குற்றச்சாட்டு இருக்கிறது. முதல்வரை சமூகவலைதளங்களில் அவதூறாக சித்தரித்து புகைப்படத்தை வரைந்தவரை கைது செய்ய டிஜிபி எப்படி உத்தரவிட்டார் என தெரியவில்லை.

கர்நாடகா மாநிலத்தின் மேகதாது அணை கட்டுவதற்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சென்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது செந்தில் பாலாஜி இப்போது அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அடுத்து அமைச்ச கே என் நேரு அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறும்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத் துறை செல்லவும் வாய்ப்புள்ளது. காவிரி ஆறு விவகாரத்தில் திமுக தமிழகத்தில் துரோகம் செய்துள்ளது. காவிரி ஆறு விவகாரத்தில் கருணாநிதியை போல் ஸ்டாலினும் துரோகம் செய்து வருகிறார். இந்தியாவின பிரதமர் ஆவதற்கு தமிழகத்தில் யாருக்கும் தகுதி இல்லை.

அமலாக்க, 6த் துறை நடத்தும் சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. செந்தில் பாலாஜியிடம் இருந்து 19 ஆயிரம் கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு எச் ராஜா தெரிவித்தார். தக்காளி விவசாயிகள் படும்பாடு அதிகம். எனவே 40 ரூபாய்க்கு கீழ் தக்காளி விலை குறைந்தால்தான் தக்காளி வாங்குவோம் எனும் முடிவை எடுக்க வேண்டும்.

4 அல்லது 5 நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறையலாம் என்றும் எச் ராஜா யோசனை தெரிவித்துள்ளார். அது போல் டிவிட்டரில் எச் ராஜா தனது பதிவில் தெய்வீக சிகாமணி, கௌதம சிகாமணி எல்லாம் ஆயோக்ய சிகாமணி தான் போலிருக்கு. பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஊழல் தமிழ் உணர்வு, தமிழர் நலன், மாநில உரிமை இவை அனைத்தும் மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் தந்திரமே. தமிழகம் முன்னேர திநாவிடியன் ஸ்டாக் அடியோடு அழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஸ்டாலினின் சபதத்தை அமலாக்கத்துறை நிறைவேற்றிவிட்டது என நான் அவருக்கு டேக் செய்து இந்த கருத்தை தெரிவித்தேன். அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்- திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜிக்கு சிறைதான் என்றார். அவரும் ஆட்சிக்கு வந்தார், ஆனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+