அடுத்த ED சோதனை "இந்த" அமைச்சர் வீட்டில்தான்.. எச்.ராஜா சொல்வது பலிக்குமோ? ஐயோ முக்கியமானவராச்சே
திருச்சி: அடுத்தது இந்த அமைச்சரின் வீட்டில்தான் அமலாக்கத் துறை ரெய்டு நடத்த போகிறது என பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாகவும் இந்துகளுக்கு விரோதமாகவும் குற்றம்சாட்டி அதை கண்டித்து திருச்சி மார்க்கெட் பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசுகையில் திமுக ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
இவர்களது ஆட்சியை துரத்த வேண்டும். இதை ஆட்சி மாற்றம் மூலம் நாம் செய்ய வேண்டும். இவர்கள் ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தில் புல்டோசர் ஆட்சி அமையும். அப்போது அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும் இந்துக்களுக்கும் விரோதமான அராஜக ஆட்சி நடக்கிறது.
திராவிட மாடல் இயக்கத்தின் கடைசி சகாப்தம் இதுதான். திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவும், அமைச்சர் கே.என்.நேருவும் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது கே.என்.நேரு கூறுகையில், வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது.

இது ஒரு பிரச்சினையா என முட்டாள்தனமாக கேட்கிறார். வீட்டு காரை விழுவதற்கும் கோயில் கோபுரம் சுவர் விழுவதற்கும் வித்தியாசம் இல்லையா. இந்து அறநிலையத் துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்திற்கு இந்து அறநிலையத் துறையே வேண்டாம். தமிழகத்தில் அடுத்து அமலாக்கத் துறை சோதனை சேகர் பாபு வீட்டில்தான் நடக்கும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜாவும் ஒவ்வொரு முறையும் இந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு , அந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு என பட்டியலிட்டு வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடக்கும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எச் ராஜா சேகர்பாபுவை குறிவைத்து பேசியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications